செய்திகள்
கொரோனா வைரஸ்

ஈரோட்டில் கொரோனா பாதித்த பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரம்

Published On 2020-06-16 13:24 IST   |   Update On 2020-06-16 13:24:00 IST
ஈரோடு மாநகராட்சியில் 2 குழுக்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் சளி, காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடந்து வருகிறது.
ஈரோடு:

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வளையக்கார வீதியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தங்கியிருந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. மேலும், சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களின் உடல் நிலை குறித்த தகவல்களை சேகரித்தனர். இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அதிகாரி (பொறுப்பு) டாக்டர் அம்பிகா கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சியில் 2 குழுக்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் சளி, காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடந்து வருகிறது. அதன்படி வளையக்கார வீதி பகுதியில் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர் தலைமையில் கொரோனா பரிசோதனை நடந்தது. முதல் கட்டமாக சளி, காய்ச்சல் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். பின்னர் தேவைப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த நடைமுறை தொடர்ந்து நடந்து வருகிறது.

இவ்வாறு டாக்டர் அம்பிகா கூறினார்.

Similar News