செய்திகள்
சீர்காழிக்கு சென்னையில் இருந்து திரும்பிய கேமராமேனுக்கு கொரோனா
சீர்காழிக்கு சென்னையில் இருந்து திரும்பிய கேமராமேனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி, இரணியன் நகர் தாடாளன் வடக்கு வீதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் சென்னையில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் கேமரா மேனாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த 25ம் தேதி ஊர் திரும்பிய போது சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அதன் முடிவு நேற்று இரவு தெரியவந்தது. அதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் மயிலாடுதுறையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் வசித்த பகுதியில் நகராட்சி ஊழியர்கள் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டுள்ளதுடன், அப்பகுதியில் வசிப்பவர்கள் வெளியே வராதபடி தடுப்புகள் அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீண்டும் சீர்காழி மக்களிடையே கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி, இரணியன் நகர் தாடாளன் வடக்கு வீதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் சென்னையில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் கேமரா மேனாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த 25ம் தேதி ஊர் திரும்பிய போது சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அதன் முடிவு நேற்று இரவு தெரியவந்தது. அதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் மயிலாடுதுறையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் வசித்த பகுதியில் நகராட்சி ஊழியர்கள் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டுள்ளதுடன், அப்பகுதியில் வசிப்பவர்கள் வெளியே வராதபடி தடுப்புகள் அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீண்டும் சீர்காழி மக்களிடையே கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது.