செய்திகள்
புதுவை கவர்னர் கிரண்பேடி

கவர்னராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு- ஜனாதிபதி, பிரதமருக்கு கிரண்பேடி நன்றி

Published On 2020-05-23 06:52 GMT   |   Update On 2020-05-23 09:42 GMT
புதுச்சேரி மக்களுக்கு சேவை புரிய வாய்ப்பு அளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கவர்னர் கிரண்பேடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக கிரண்பேடி கடந்த 22.5.2016 அன்று நியமிக்கப்பட்டார். அதனையடுத்து புதுச்சேரி வந்து 29.5.2016 அன்று கவர்னராக அவர் பதவியேற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு முந்தைய தினமே புதுச்சேரி அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டமும் நடத்தினார். அன்றைய தினம் முதல் தற்போது வரை அவரது செயல்பாடுகள் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றது.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி தனது சமூக வலைதளத்தில், புதுச்சேரி மக்களுக்கு சேவை புரிய வாய்ப்பு அளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News