செய்திகள்
சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் 3 செவிலியர்களுக்கு கொரோனா அறிகுறி
சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் 3 செவிலியர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்ததையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் நகர பகுதியில் அரசு காமராஜர் ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான செலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் 3 செவிலியர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் மூடப்பட்டது.
அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்த ஒருவர் மூலம் கொரோனா தொற்று வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் ஒருவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள கீழச்சாவடி கிராமத்தில் சென்னையில் இருந்து வந்த பெண் ஒருவருக்கும் கொரோனா அறிகுறி உள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வெளிநபர்கள் யாரும் செல்லாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
சிதம்பரம் நகர பகுதியில் அரசு காமராஜர் ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான செலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் 3 செவிலியர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் மூடப்பட்டது.
அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்த ஒருவர் மூலம் கொரோனா தொற்று வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் ஒருவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள கீழச்சாவடி கிராமத்தில் சென்னையில் இருந்து வந்த பெண் ஒருவருக்கும் கொரோனா அறிகுறி உள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வெளிநபர்கள் யாரும் செல்லாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.