ஜோலார்பேட்டை அருகே கல்லூரி மாணவர் குத்திக் கொலை- ஒருவர் கைது
ஜோலார்பேட்டை:
பெங்களூருவை சேர்ந்த பார்த்தசாரதியின் மகன் அபி (வயது 18). கல்லூரி மாணவர். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தில் உள்ள உறவினர் எபிநேசர் (19) வீட்டுக்கு வந்தார்.
இருவரும், நேற்று இரவு 8 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த பகுதி சாலையில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
அதே கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பியான குமார் (35), தயாளன் (30) ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தி மோட்டா ர்சைக்கிளில் ஏன் வேகமாக செல்கிறீர்கள், மெதுவாக செல்லவேண்டியது தானே? என கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த தயாளன் தன்னிடம் இருந்த கத்தியால் அபியை சரமாரியாக குத்தினார். அபியை காப்பாற்ற முயன்ற எபிநேசருக்கும் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் அபி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
அண்ணன்-தம்பி இருவரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.