செய்திகள்
எச்.ராஜா

என்எல்சி பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தது தவறானது- எச்.ராஜா பேட்டி

Published On 2020-02-09 14:53 GMT   |   Update On 2020-02-09 14:53 GMT
நெய்வேலி என்.எல்.சி. பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தது தவறானது என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

நெய்வேலி:

நடிகர் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ சினிமா படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்.எல்.சி சுரங்கப்பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

இந்த படபிடிப்புக்கு பாரதீய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாக்கப்பட்ட இடமான என்.எல்.சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்.எல்.சி சுரங்க நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது என்று கூறி போராட்டம் செய்தனர்.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் நெய்வேலி வந்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

நெய்வேலி என்.எல்.சி சுரங்கம் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். அந்த இடத்தில் பல்வேறு விபத்துகள் நடந்துள்ளது. சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கு அங்கு அனுமதி கொடுத்ததே தவறானது ஆகும்.

அதனால் தான் அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த கூடாது என்று பாரதீய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஒரு தனி நபருக்காகவோ, படத்துக்காவே நாங்கள் எதிர்க்கவில்லை. பாதுகாப்பு கருதிதான் நாங்கள் எதிர்க்கிறோம். அந்த படத்துக்கு விளம்பரம் செய்ய நான் தயார் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News