செய்திகள்
அந்தியூர் அருகே அதிமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டி படுகொலை
அந்தியூர் அருகே அதிமுக பஞ்சாயத்து தலைவரை காரில் வந்த மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சலங்கபாளையம் ஊராட்சி தலைவராக இருந்தவர் சின்ன தங்கம் என்ற ராதா கிருஷ்ணன் (வயது 45). அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்
சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக தேர்தெடுக்கப்ட்டவர்.
ராதாகிருஷ்ணன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி அளவில் அந்தியூர் அருகே செல்லப்பம் பாளையம் பகுதியில் ஒரு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக ஒரு கார் அவர் முன் வந்து நின்றது. காரில் இருந்த கும்பல் திபு..திபுவென வந்து இறங்கியது. அடுத்த கனம் அந்த கும்பல் அங்கு நின்று பேசி கொண்டிருந்த பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் உடனடியாகக அடைக்கப்பட்டன.
அரிவாளால் வெட்டப்பட்ட ராதாகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
உடனடியாக அந்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். உடனடியாக அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரில் வந்த கும்பல் கர்நாடக மாநில எண் கொண்ட காரில் வந்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் வெட்டி கொல்லப்பட்டாரா? வேறு என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சலங்கபாளையம் ஊராட்சி தலைவராக இருந்தவர் சின்ன தங்கம் என்ற ராதா கிருஷ்ணன் (வயது 45). அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்
சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக தேர்தெடுக்கப்ட்டவர்.
ராதாகிருஷ்ணன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி அளவில் அந்தியூர் அருகே செல்லப்பம் பாளையம் பகுதியில் ஒரு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக ஒரு கார் அவர் முன் வந்து நின்றது. காரில் இருந்த கும்பல் திபு..திபுவென வந்து இறங்கியது. அடுத்த கனம் அந்த கும்பல் அங்கு நின்று பேசி கொண்டிருந்த பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் உடனடியாகக அடைக்கப்பட்டன.
அரிவாளால் வெட்டப்பட்ட ராதாகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
உடனடியாக அந்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். உடனடியாக அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரில் வந்த கும்பல் கர்நாடக மாநில எண் கொண்ட காரில் வந்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் வெட்டி கொல்லப்பட்டாரா? வேறு என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.