மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 வாலிபர்கள் கைது
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுமியிடம் பழகி வந்தார்.
சம்பவத்தன்று அந்த பெண்ணின் பெற்றோர் வெளியூர் சென்று விட்டனர். இதனை அறிந்த சந்தோஷ் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தனது செல்போனில் திருட்டுதனமாக வீடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோவை அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் கண்ணன் (36) என்பவரிடம் காண்பித்துள்ளார். இந்த நிலையில் கண்ணனும், அந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். அதிர்ச்சியயடைந்த சிறுமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.
இது பற்றி தனது பெற்றோரிடம் அவர் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் இதுபற்றி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சந்தோஷ், கண்ணன் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.