செய்திகள்
படுக்கையில் வந்து ஜனநாயக கடமை ஆற்றிவிட்டு இறந்த 92 வயது முதியவர்
படுக்கையில் வந்து ஜனநாயக கடமையாற்றிவிட்டு இறந்த முதியவரை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியந்து பாராட்டினர்.
கடத்தூர்:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட பி.பி.எம்.நகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 92). இவர் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். எனினும் அவர் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க விரும்பினார். இதைத்தொடர்ந்து அவருடைய பேரன் கார்த்திக் என்பவர் முத்துசாமியை தூக்கி படுக்கையில் (ஸ்ட்ரெச்சர்) வைத்து பச்சைமலை அருகே ஒரு பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு மாலை 4.30 மணி அளவில் அழைத்து வந்தார்.
அங்கு அவர் படுக்கையில் படுத்தபடி தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் அவர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். படுக்கையில் வந்து ஜனநாயக கடமையாற்றிவிட்டு இறந்த முதியவரை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியந்து பாராட்டினர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட பி.பி.எம்.நகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 92). இவர் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். எனினும் அவர் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க விரும்பினார். இதைத்தொடர்ந்து அவருடைய பேரன் கார்த்திக் என்பவர் முத்துசாமியை தூக்கி படுக்கையில் (ஸ்ட்ரெச்சர்) வைத்து பச்சைமலை அருகே ஒரு பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு மாலை 4.30 மணி அளவில் அழைத்து வந்தார்.
அங்கு அவர் படுக்கையில் படுத்தபடி தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் அவர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். படுக்கையில் வந்து ஜனநாயக கடமையாற்றிவிட்டு இறந்த முதியவரை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியந்து பாராட்டினர்.