செய்திகள்
முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்- ஈரோடு மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற் கட்ட வாக்குப்பதிவு ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
ஈரோடு:
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற் கட்ட வாக்குப்பதிவு ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 183 வார்டுகள், 225 கிராம ஊராட்சி தலைவர்கள், 2097 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 19 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் உள்ளன.
இதில் முதல் கட்ட தேர்தல் ஈரோடு கோபி கொடுமுடி மொடக்குறிச்சி நம்பியூர் தாளவாடி டி. என். பாளையம் ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 894 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும், 95 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளும் 79 ஊராட்சி ஒன்றியக் குழு வார்டுகளுக்கும், 8 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 657 ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஈரோடு ஒன்றியத்தில் 49 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோபி ஒன்றியங்களில் 144 வாக்குச்சாவடி மையங்கள் கொடுமுடி ஒன்றியங்களில் 52 வாக்குச்சாவடி மையங்கள்,
மொடக்குறிச்சி ஒன்றியங்களில் 160 வாக்குச்சாவடி மையங்கள், நம்பியூரில் 102 வாக்குச்சாவடி மையங்கள், தாளவாடியில் 75 வாக்குச்சாவடி மையங்கள், டி.என்.பாளையத்தில் 75 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 218 பேர் வாக்களிக்கிகின்றனர்.
ஒரு வாக்காளர் நான்கு பதவிகளுக்கான வாக்குகளை செலுத்தினர். அதாவது வார்டு உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட கவுன்சிலர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு தங்களது வாக்குகளை செலுத்தினர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடும் பனிப்பொழிவு பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.
மேலும் முதியவர்களும் தங்களது ஜனநாயக கடமைகளை வந்து நிறைவேற்றினர். வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு லக்காபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெறும் வாக்கு பதிவை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பார்வையிட்டார்.
கிராம பகுதிகளில் இன்று காலை முதல் தொடங்கி நடந்து வரும் வாக்குப்பதிவில் பல இடங்களில் இளைஞர்களுக்கு இணையாக முதியோர்கள் வந்து ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.
அவர்கள் கூறும்போது, கவுன்சிலர் வந்தால்தான் எங்கள் பகுதியில் ரோடு, தண்ணீர் வசதி செய்து தருவார்கள். அதற்காக தவறாமல் ஓட்டு போடுகிறோம் என்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வரிசையில் காத்திருந்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் ஓட்டு போட்டார்.
அந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட காலை 6.30 மணிக்கெல்லாம் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற் கட்ட வாக்குப்பதிவு ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 183 வார்டுகள், 225 கிராம ஊராட்சி தலைவர்கள், 2097 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 19 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் உள்ளன.
இதில் முதல் கட்ட தேர்தல் ஈரோடு கோபி கொடுமுடி மொடக்குறிச்சி நம்பியூர் தாளவாடி டி. என். பாளையம் ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 894 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும், 95 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளும் 79 ஊராட்சி ஒன்றியக் குழு வார்டுகளுக்கும், 8 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 657 ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஈரோடு ஒன்றியத்தில் 49 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோபி ஒன்றியங்களில் 144 வாக்குச்சாவடி மையங்கள் கொடுமுடி ஒன்றியங்களில் 52 வாக்குச்சாவடி மையங்கள்,
மொடக்குறிச்சி ஒன்றியங்களில் 160 வாக்குச்சாவடி மையங்கள், நம்பியூரில் 102 வாக்குச்சாவடி மையங்கள், தாளவாடியில் 75 வாக்குச்சாவடி மையங்கள், டி.என்.பாளையத்தில் 75 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 218 பேர் வாக்களிக்கிகின்றனர்.
ஒரு வாக்காளர் நான்கு பதவிகளுக்கான வாக்குகளை செலுத்தினர். அதாவது வார்டு உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட கவுன்சிலர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு தங்களது வாக்குகளை செலுத்தினர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடும் பனிப்பொழிவு பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.
மேலும் முதியவர்களும் தங்களது ஜனநாயக கடமைகளை வந்து நிறைவேற்றினர். வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு லக்காபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெறும் வாக்கு பதிவை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பார்வையிட்டார்.
கிராம பகுதிகளில் இன்று காலை முதல் தொடங்கி நடந்து வரும் வாக்குப்பதிவில் பல இடங்களில் இளைஞர்களுக்கு இணையாக முதியோர்கள் வந்து ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.
அவர்கள் கூறும்போது, கவுன்சிலர் வந்தால்தான் எங்கள் பகுதியில் ரோடு, தண்ணீர் வசதி செய்து தருவார்கள். அதற்காக தவறாமல் ஓட்டு போடுகிறோம் என்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வரிசையில் காத்திருந்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் ஓட்டு போட்டார்.
அந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட காலை 6.30 மணிக்கெல்லாம் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.