செய்திகள்
முருகன் - நளினி

வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம்: நளினி-முருகன் உடல் சோர்வு

Published On 2019-12-06 09:58 GMT   |   Update On 2019-12-06 09:58 GMT
வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் நளினி-முருகன் உடல்நிலை சோர்வடைந்துள்ளது. அவர்களுக்கு இன்று 2வது நாளாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

தன்னையும் தனது கணவரையும் சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்ற சிறை அதிகாரிகள் மறுக்கிறார்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் கூட ஜெயில் அதிகாரிகள் அதை கடைப்பிடிக்கவில்லை. தங்களை கர்நாடக ஜெயிலுக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்ற வேண்டும் என்று நளினி தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நளினி இன்று 9-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கருணை கொலை செய்யக்கோரி முருகனும் ஜெயிலில் 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

நளினி-முருகன் உடல் நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு குறித்து காலை மற்றும் மாலை நேரங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.

2 பேர் உடல்நிலை சோர்வடைந்துள்ளது. அவர்களுக்கு இன்று 2-வது நாளாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

Tags:    

Similar News