செய்திகள்
விபத்தில் இறந்த மங்கமலை

கள்ளக்குறிச்சி அருகே விபத்து- வாலிபர் பலி

Published On 2019-12-04 06:09 GMT   |   Update On 2019-12-04 12:16 GMT
கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெரியசிறுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம். இவருக்கு சுந்தரம்(வயது 30), மங்கமலை(28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

மங்கமலை வெளிநாட்டில் வேலைபார்த்து விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை சுந்தரமும், மங்கமலையும் ஒரு மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி சென்றனர்.

பின்னர் அவர்கள் இரவு நேரத்தில் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை மங்கமலை ஓட்டினார். பின்னால் அவரது அண்ணன் சுந்தரம் இருந்தார். அண்ணாநகர் அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மங்கமலை அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது அண்ணன் சுந்தரம் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த சுந்தரத்தை மீட்டனர். அவர் கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் இறந்த மங்கமலையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News