செய்திகள்
மீட்கப்பட்ட ஐம்பொன் சிலை.

காட்பாடி மாரியம்மன் கோவிலில் கொள்ளைபோன 108 கிலோ ஐம்பொன் சிலை மீட்பு

Published On 2019-11-22 09:19 GMT   |   Update On 2019-11-22 09:19 GMT
வேலூர் மாவட்டம் காட்பாடி மாரியம்மன் கோவிலில் கொள்ளை போன 108 கிலோ ஐம்பொன் சிலை தண்டவாளம் அருகே மீட்கப்பட்டது.
வேலூர்:

காட்பாடி வள்ளிமலை சாலையில் வி.டி.கே. நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டு பழமையான இந்த கோவிலில் 30 ஆண்டுக்கு முன்பு 108 கிலோ ஐம்பொன் அம்மன் சிலை செய்து வைத்தனர்.

கடந்த 14-ந்தேதி இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த 108 கிலோ ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டது.

கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே கொள்ளை போன 108 கிலோ ஐம்பொன் சிலையை திருட்டு கும்பல் வீசி சென்றுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சிலையை மீட்டு கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். ஐம்பொன் சிலை கிடைத்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் பரவசமடைந்தனர்.

ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து தண்டவாளத்தில் வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News