செய்திகள்
பேரறிவாளன் விடுதலை பெற்று வீட்டுக்கு திரும்புவதே முழு நிம்மதி - அற்புதம்மாள்
பேரறிவாளன் விடுதலை பெற்று வீட்டுக்கு திரும்புவதே முழு நிம்மதி என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறினார்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை வீட்டிற்கு வந்த பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். அப்போது அற்புதம்மாள் கூறியதாவது:-
எனது மகன் 2-வது முறையாக பரோலில் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இது மட்டும் போதாது. பேரறிவாளனின் 28 ஆண்டு கால வாழ்க்கை வீணாகி விட்டது. தற்போது 29 ஆண்டு நடக்கிறது. அவர் விடுதலை பெற்று வீட்டுக்கு வர வேண்டும் அது தான் எனக்கு முழு நிம்மதி. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
2-வது முறையாக பரோல் வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் அரசு விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜோலார்பேட்டை வீட்டிற்கு வந்த பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். அப்போது அற்புதம்மாள் கூறியதாவது:-
எனது மகன் 2-வது முறையாக பரோலில் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இது மட்டும் போதாது. பேரறிவாளனின் 28 ஆண்டு கால வாழ்க்கை வீணாகி விட்டது. தற்போது 29 ஆண்டு நடக்கிறது. அவர் விடுதலை பெற்று வீட்டுக்கு வர வேண்டும் அது தான் எனக்கு முழு நிம்மதி. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
2-வது முறையாக பரோல் வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் அரசு விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.