செய்திகள்
முருகன்

வேலூர் ஜெயிலில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்

Published On 2019-11-12 05:34 GMT   |   Update On 2019-11-12 05:34 GMT
வேலூர் சிறையில் உள்ள முருகன் இன்று காலை உணவை சாப்பிட மறுத்து 2-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18-ந் தேதி சிறை போலீசார் கைதிகள் அறையில் சோதனை நடத்தினர்.

அப்போது முருகன் அறையில் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் முருகன் தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சலுகைகள் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் சிறை அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் 18-ந்தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

சிறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி 20 நாட்களாக இருந்த உண்ணாவிரதத்தை கடந்த 6-ந்தேதி முருகன் கைவிட்டார். இதையடுத்து நளினியுடன் சந்திக்க அனுமதியளித்தனர்.

தனி சிறை வேண்டாம். ஏற்கனவே இருந்த அறையில் அடைக்குமாறு முருகன் சிறை அதிகாரிகளிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிறை போலீசார் மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தன்னை மீண்டும் பழைய அறைக்கு மாற்றும் வரை தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று சிறை போலீசாரிடம் முருகன் நேற்று மனு அளித்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் மீண்டும் முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளார். இன்று காலை உணவை சாப்பிட மறுத்து 2-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
Tags:    

Similar News