செய்திகள்
நளினி

வேலூர் ஜெயிலில் உண்ணாவிரதத்தை கைவிட்டார் நளினி

Published On 2019-11-05 11:56 IST   |   Update On 2019-11-05 11:56:00 IST
வேலூர் ஜெயிலில் 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த நளினி இன்று தனது போராட்டத்தை கைவிட்டார்.
வேலூர்:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.

ஜெயிலில் உள்ள முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த 26-ந்தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 11-வது நாளாக நளினி தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அதேபோல் தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகனும் இன்று 19-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.



முருகன்- நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல் நிலை மிகவும் சோர்வாக உள்ளது. டாக்டர்கள் குழுவினர் 2 பேரின் உடல் நிலையையும் கண்காணித்து வந்தனர்.

2 பேரும் சாப்பிடாமல் இருப்பதால் மிகவும் சோர்வாக உள்ளனர். இதனால் நேற்று முன்தினம் முதல் 2 பேருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. டாக்டர்கள் முருகன்-நளினிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறித்து பரிசோதனை செய்தனர்.

இந்நிலையில் வேலூர் பெண்கள் ஜெயிலில் இன்று 11-வது நாளாக மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தை நளினி கைவிட்டார்.

நளினியுடன் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தை காரணமாக தனது உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டார்.

Similar News