செய்திகள்
விபத்து

மானாமதுரை அருகே அரசு பஸ் மோதி அண்ணன்-தம்பி பலி

Published On 2019-10-30 13:05 IST   |   Update On 2019-10-30 13:05:00 IST
மானாமதுரை அருகே அரசு பஸ் மோதி அண்ணன்-தம்பி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானாமதுரை:

மானாமதுரை அருகேயுள்ள பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் மூர்த்தி (47). முருகன் (46), சகோதரர்களான இவர்கள் இருவரும் மொபட்டில் மானாமதுரைக்கு புறப்பட்டனர்.

மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் மானாமதுரை எல்லையில் நகருக்குள் செல்லும் சாலையில் செல்ல முயன்றனர்.

அப்போது ராமேசுவரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மொபட்டில் பயணம் செய்த சகோதரர்களான மூர்த்தியும், முருகனும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மானாமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News