செய்திகள்
மருதுபாண்டியர் குருபூஜை: சிவகங்கையில் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு
மருதுபாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் வருகிற 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை:
மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில் வருகிற 24ஆம் தேதி அரசு சார்பில் நினைவு தினமும், 27ஆம் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர் சமாதியில் குருபூஜை விழாவும் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, மருதுபாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று முதல் வருகிற 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி பரிந்துரையின்பேரில், இந்த தடை உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார்.
குருபூஜை விழா மற்றும் மரியாதை செலுத்துவதற்காக வரும் தலைவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற வேணடும். ஒவ்வொரு தலைவருக்கும் மூன்று வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தொண்டர்கள் யாரும் ஜோதி ஓட்டம், பேனர்கள் மற்றும் கொடிகள் ஏந்தி வரக்கூடாது, ஆபத்து விளைவிக்கும் பொருட்களை கொண்டு வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.