செய்திகள்
மழை (கோப்புப்படம்)

விடிய விடிய தொடர் மழை: சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2019-10-21 05:31 GMT   |   Update On 2019-10-21 05:31 GMT
சிவகங்கை மாவட்டத்தில் இன்று காலையும் இடைவிடாது சாரல் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரியையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வளி மண்டல சுழற்சி காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வாரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வந்தது. நேற்று மாலையில் ஒரு சில இடங்களில் கனமான முதல் மிதமான மழை பெய்தது. இரவு 12 மணி முதல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.

5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் சிவகங்கை நகர், காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

முக்கிய சாலைகளில் மழைநீர், வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின்னர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்று காலையும் இடைவிடாது சாரல் மழை பெய்ததால் சிவகங்கை மாவட்டத்தில் இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

சிவகங்கை-5.9
திருப்புவனம்-12.4
தேவகோட்டை-33.2
சிங்கம்புணரி-2.4.
Tags:    

Similar News