செய்திகள்
இளைஞர்கள் உருவாக்கிய நீர்த்தேக்க குட்டை மழையால் நிரம்பியது
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே இளைஞர்கள் புதியதாக உருவாக்கிய நீர்த்தேக்க குட்டை கன மழையால் நிரம்பியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே செலம்பகவுண்டன் பாளையத்தில் இருந்த பொது மயானம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டதால் பழைய மயான இடம் ஒரு ஏக்கர் அளவில் சும்மா கிடந்தது.
இந்த இடத்தில் இளைஞர்கள் ஓருங்கிணைந்து ‘நம்மால் முடியும் நண்பா’ என்ற குழுவினை ஏற்படுத்தி ரூ.60 ஆயிரம் செலவின் மூலம் 1500 அடி நீர் வழி பாதை மற்றும் புதிய நீர் தேக்க குட்டையையும் அமைத்திருந்தனர்.
இதுகுறித்து ‘நம்மால் முடியும் நண்பா’ குழுவின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுகரசு கூறும்போது , “இதுவரை எங்கள் பகுதியில் பெய்த மழை வீணாக நொய்யல் ஆற்றில் தான் கலந்து வந்தது. தற்போது நீர் தேக்க குட்டை மழை நீரால் நிரம்பி உள்ளது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இங்குள்ள கிணறு, போர்வெல்களில் அதிக தண்ணீர் கிடைக்கும்” என்றார்.
சென்னிமலை அருகே செலம்பகவுண்டன் பாளையத்தில் இருந்த பொது மயானம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டதால் பழைய மயான இடம் ஒரு ஏக்கர் அளவில் சும்மா கிடந்தது.
இந்த இடத்தில் இளைஞர்கள் ஓருங்கிணைந்து ‘நம்மால் முடியும் நண்பா’ என்ற குழுவினை ஏற்படுத்தி ரூ.60 ஆயிரம் செலவின் மூலம் 1500 அடி நீர் வழி பாதை மற்றும் புதிய நீர் தேக்க குட்டையையும் அமைத்திருந்தனர்.
இந்த நீர்த் தேக்க குட்டை ஒரு நாள் பெய்த கன மழையால் நிரம்பியது. இது இந்த பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியினை கொடுத்துள்ளது.
இதுகுறித்து ‘நம்மால் முடியும் நண்பா’ குழுவின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுகரசு கூறும்போது , “இதுவரை எங்கள் பகுதியில் பெய்த மழை வீணாக நொய்யல் ஆற்றில் தான் கலந்து வந்தது. தற்போது நீர் தேக்க குட்டை மழை நீரால் நிரம்பி உள்ளது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இங்குள்ள கிணறு, போர்வெல்களில் அதிக தண்ணீர் கிடைக்கும்” என்றார்.