செய்திகள்
விபத்து

லாரி மீது கார் மோதல்: சென்னை புதுமணத் தம்பதி பலி

Published On 2019-10-08 13:55 IST   |   Update On 2019-10-08 13:55:00 IST
லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னை புதுமணத் தம்பதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்மாறன் (வயது21).

இவரது மனைவி சுவேதா (20). இவர்களுக்கு திருமணமாகி சில மாதங்களே ஆகிறது.

இவர்கள் சொந்த ஊரான சூலேரிக்காடு கிராமத்திற்கு நேற்று மாலை காரில் சென்று கொண்டிருந்தனர்.

திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.

போலீசார் அவர்களை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்மாறனும், சுவேதாவும் பரிதாபமாக உயரிழந்தனர்.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News