செய்திகள்
டெங்கு காய்ச்சல்

ஈரோடு மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு தீவிர சிகிச்சை

Published On 2019-10-08 10:00 IST   |   Update On 2019-10-08 10:00:00 IST
ஈரோடு மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சென்னிமலை, தாளவாடி, சத்தியமங்கலம் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 பேருக்கு டெங்கு நோய் அறிகுறி இருந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நேரலை கட்டுப்படுத்த 76 குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் இந்த குழுவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

தண்ணீரை தேக்கி வைக்க கூடாது. வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பார்த்துக் கொள்ளுங்கள் வீட்டு முன் மழை தண்ணீர் தேங்கி இருந்தால் அதை வழிய விடுங்கள் மண்ணை கொட்டுங்கள் என அறிவுறுத்தி வருகிறார்கள்.

இதே போல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு நோய் பற்றியும் டெங்குவை பரப்பும் கொசுக்கள் பற்றியும் அதனை அழிப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை கற்று கொண்ட மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர் உறவினர்களிடம் இதனை எடுத்துக் கூறி டெங்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Similar News