செய்திகள்
பவானிசாகர் அணை (கோப்புப்படம்)

நீர்பிடிப்பு பகுதியில் மழை- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2019-10-01 05:08 GMT   |   Update On 2019-10-01 05:08 GMT
கடந்த 2 நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் தற்போது நீர்வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது.
ஈரோடு:

கடந்த 2 நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் தற்போது நீர்வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது.

நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் மழை பெய்ததையொட்டி நேற்று நள்ளிரவு முதல் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இன்று காலை 7 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4070 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து பாசனத்துக்காக தடப்பள்ளி அரக்கன் கோட்டை வாய்க்காலில் 650 கனஅடியும், காளிங்கராயன் வாய்க்காலுக்கு 500 கனஅடியும், கீழ்பவானி பிரதான கால்வாயில் 2300 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.90 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News