செய்திகள்
ஈரோட்டில் கொட்டி தீர்த்த கனமழை- வயல்களில் பாய்ந்து ஓடிய வெள்ளம்
ஈரோட்டில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதி மற்றும் ரோட்டோரம் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டியது. அங்கு 85.6 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையால் தாழ்வான பகுதி மற்றும் ரோட்டோரம் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் அப்பகுதியில் வயல் மற்றும் தோட்டங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அடுத்தப்படியாக ஈரோடு நகர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது.
ஈரோடு, சூரம்பட்டி, சம்பத்நகர், வீரப்பன் சத்திரம், கருங்கல்பாளையம், திண்டல், வீரப்பம்பாளையம், ஆனைக்கல் பாளையம், சோலார், லக்காபுரம், மூலப்பாளையம், கொல்லம்பாளையம், சாஸ்திரி நகர் உள்பட மாநகர் முழுவதும் கனமழை பெய்தது.
இதையொட்டி மழை வெள்ளம் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியதோடு மூலப்பாளையம், கொல்லம்பாளையம் பஸ் நிறுத்தம் உள்பட பல இடங்களில் மழை தண்ணீர்சிறிய குளம்போல் தேங்கி நிற்கிறது.
இந்த கனமழையால் ஈரோடு ஆனைக்கல் பாளையம் ஆயுதப்படை வளாகத்துக்கு செல்லும் வழியில் ரிங் ரோட்டில் உள்ள வாய்க்கால்களில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து சீறிப்பாய்ந்து வயல்களில் ஓடியது. ஈரோடு பகுதியில் 62 மி.மீ. மழை பதிவானது.
மேலும் கவுந்தப்பாடி, கொடுமுடி, பெருந்துறை, கோபி, நம்பியூர், குண்டேரிபள்ளம், கொடிவேரி அணை பகுதிகளில் மழை பெய்தது.
இந்த கனமழையால் ஈரோடு மாவட்ட மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
அம்மாபேட்டை- 85.6
ஈரோடு - 62
பவானி - 24.4
கொடுமுடி - 13.6
மேடு - 9.7
கொடிவேரி - 6.2
குண்டேரிபள்ளம்-2.6.
ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டியது. அங்கு 85.6 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையால் தாழ்வான பகுதி மற்றும் ரோட்டோரம் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் அப்பகுதியில் வயல் மற்றும் தோட்டங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அடுத்தப்படியாக ஈரோடு நகர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது.
ஈரோடு, சூரம்பட்டி, சம்பத்நகர், வீரப்பன் சத்திரம், கருங்கல்பாளையம், திண்டல், வீரப்பம்பாளையம், ஆனைக்கல் பாளையம், சோலார், லக்காபுரம், மூலப்பாளையம், கொல்லம்பாளையம், சாஸ்திரி நகர் உள்பட மாநகர் முழுவதும் கனமழை பெய்தது.
இதையொட்டி மழை வெள்ளம் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியதோடு மூலப்பாளையம், கொல்லம்பாளையம் பஸ் நிறுத்தம் உள்பட பல இடங்களில் மழை தண்ணீர்சிறிய குளம்போல் தேங்கி நிற்கிறது.
இந்த கனமழையால் ஈரோடு ஆனைக்கல் பாளையம் ஆயுதப்படை வளாகத்துக்கு செல்லும் வழியில் ரிங் ரோட்டில் உள்ள வாய்க்கால்களில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து சீறிப்பாய்ந்து வயல்களில் ஓடியது. ஈரோடு பகுதியில் 62 மி.மீ. மழை பதிவானது.
மேலும் கவுந்தப்பாடி, கொடுமுடி, பெருந்துறை, கோபி, நம்பியூர், குண்டேரிபள்ளம், கொடிவேரி அணை பகுதிகளில் மழை பெய்தது.
இந்த கனமழையால் ஈரோடு மாவட்ட மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
அம்மாபேட்டை- 85.6
ஈரோடு - 62
பவானி - 24.4
கொடுமுடி - 13.6
மேடு - 9.7
கொடிவேரி - 6.2
குண்டேரிபள்ளம்-2.6.