செய்திகள்
பண்ருட்டியில் விபத்து: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பலி
பண்ருட்டியில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் சக்தி(16).சிவகண்டன் (16). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் சக்தி,சிவகண்டன் ஆகிய 2பேரும் கலந்து கொண்டனர். விழா முடிந்த பின்னர் அவர்கள் 2 பேரும் பள்ளியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு சென்றனர்.
பின்னர் நெய்வேலியில் இருந்து காடாம்புலியூருக்கு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சக்தி ஓட்டினார். சிவகண்டன் பின்னால் அமர்ந்து இருந்தார். காடாம்புலியூர் தாமரைக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து நெய்வேலி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சக்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சக்தி, சிவகண்டன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பிளஸ்-1 மாணவர்கள் 2 பேரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் சக்தி(16).சிவகண்டன் (16). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் சக்தி,சிவகண்டன் ஆகிய 2பேரும் கலந்து கொண்டனர். விழா முடிந்த பின்னர் அவர்கள் 2 பேரும் பள்ளியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு சென்றனர்.
பின்னர் நெய்வேலியில் இருந்து காடாம்புலியூருக்கு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சக்தி ஓட்டினார். சிவகண்டன் பின்னால் அமர்ந்து இருந்தார். காடாம்புலியூர் தாமரைக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து நெய்வேலி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சக்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சக்தி, சிவகண்டன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பிளஸ்-1 மாணவர்கள் 2 பேரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.