கடலூர் அருகே பெண்ணுடன் காரில் சாராயம் கடத்திய இன்ஸ்பெக்டர்
கடலூர், ஆக.12-
கடலூர் மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார் கடலூர் அருகே உண்ணாமைலைசெட்டி சாவடியில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்தனர். அந்த காரில் இருந்தவர் திடீரென இறங்கி தப்பி ஓடிவிட்டார். உஷாரான போலீசார் காரை சோதனை செய்த னர். அதில் 148 மதுப்பாட் டில்கள், 30 லிட்டர் சாரா யம் இருந்தது.
காரில் இருந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் சூலாங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி சமுத்திரக்கனி (வயது 48) என தெரிய வந்தது.
இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்து விட்ட நிலையில் புதுவையில் இருந்து அவர் அடிக்கடி மதுப்பாட்டில்கள் கடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவருக்கு கடலூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
எனவே சமுத்திரக்கனி இன்ஸ்பெக்டர் சுந்த ரேசனிடம் மதுப்பாட்டில் களை கடத்தி சென்று விற்பனை செய்ய உதவ வேண்டும் என்று கேட்டுள் ளார். அதன்படி இன்ஸ் பெக்டர் சுந்தரேசன் தனது காரில் சாராயம் மற்றும் மதுப்பாட்டில்களை புதுவையில் இருந்து வாங்கி வந்துள்ளார்.
மேற்கண்டவை போலீ சாரின் விசாரணை யில் தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். * * * கைது செய்யப்பட்ட சமுத்திரக்கனி * * * பறிமுதல் செய்யப்பட்ட கார்