செய்திகள்
பண்ருட்டி அருகே விவசாயி வீட்டில் நகை- பணம் கொள்ளை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது சிறுகிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 72).விவசாயி. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்கள் குடும்பியான் குப்பத்தில் பண்ருட்டி- சேலம் மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.
கடந்த 19-ந்தேதி கணவனும் மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனை அறிந்த மர்ம மனிதர்கள் இரவில் ராமமூர்த்தியின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை- பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்றுவிட்டனர்.
இன்று காலை வெளியூர் சென்று இருந்த ராமமூர்த்தி வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கு பீரோ திறந்து கிடப்பதையும் பொருட்கள் சிதறி கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை- பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அவர் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். உடனே இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த கொள்ளையில் துப்பு துலக்க கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகையை பதிவு செய்தனர். கொள்ளை போன நகை- பணத்தின் மதிப்பு தெரியவில்லை. வீடு பூகுந்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது சிறுகிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 72).விவசாயி. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்கள் குடும்பியான் குப்பத்தில் பண்ருட்டி- சேலம் மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.
கடந்த 19-ந்தேதி கணவனும் மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனை அறிந்த மர்ம மனிதர்கள் இரவில் ராமமூர்த்தியின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை- பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்றுவிட்டனர்.
இன்று காலை வெளியூர் சென்று இருந்த ராமமூர்த்தி வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கு பீரோ திறந்து கிடப்பதையும் பொருட்கள் சிதறி கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை- பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அவர் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். உடனே இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த கொள்ளையில் துப்பு துலக்க கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகையை பதிவு செய்தனர். கொள்ளை போன நகை- பணத்தின் மதிப்பு தெரியவில்லை. வீடு பூகுந்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.