செய்திகள்

ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினார் - மீன், வாத்து விற்று மன்சூர்அலிகான் பிரசாரம்

Published On 2019-04-09 10:12 GMT   |   Update On 2019-04-09 10:12 GMT
ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் திரும்பிய மன்சூர்அலிகான் மீண்டும் தனது வழக்கமான பாணியில் பிரசாரம் செய்தார். #MansoorAliKhan
பழனி:

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூதனமான முறையில் பிரசாரம் செய்து மக்களோடு மக்களாக இணைந்து வாக்குசேரித்து வருகிறார். இது பெரும்பாலான பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

நிலக்கோட்டை பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது கட்சி தொண்டர்கள் மன்சூர்அலிகானை ஆஸ்பத்தரியில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து மீண்டும் தனது பழைய பாணியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

பழனியை அடுத்துள்ள வண்டிவாய்க்கால் பகுதியில் மீன் சந்தையில் மன்சூர்அலிகான் தனது ஆதரவாளர்களுடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அங்குள்ள வாத்துகளை தூக்கி கையாலே எடை பார்த்து விலை நிலவரங்களை கேட்டறிந்தார். அதன்பிறகு மீன் விலை நிலவரங்களை கேட்டறிந்து பொதுமக்களை அழைத்து விற்பனை செய்தார்.

மீனை அதன் செதில்களை சீவி சுத்தப்படுத்தி கழிவுகளை அகற்றி பொதுமக்களிடம் கொடுத்தார். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக அவர்கள் கொண்டு வந்த பைகளில் மீன்களை வழங்கினார். அனைவரும் எனக்கு ஓட்டு போடுங்கள் நான் வாரம் தோறும் வந்து உங்களுக்கு மீன் வெட்டி தருகிறேன் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து மீன் வியாபாரிகளிடம் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார். #MansoorAliKhan
Tags:    

Similar News