செய்திகள்
வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த கூடாது- அமைச்சர் ஜெயக்குமார்
வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தக்கூடாது என்று சென்னையில் இன்று நடைபெற்ற தேர்தல் ஆணையம் கூட்டத்தில் வலியுறுத்தியதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #LoksabhaElections2019 #ElectionCommission #ITRaids
சென்னை:
தேர்தல் கமிஷனரை சந்தித்த பிறகு அரசியல் கட்சி பிரமுகர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-
அமைச்சர் ஜெயக்குமார் (அ.தி.மு.க.):-
நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். ஆனால் தி.மு.க. 2ஜியில் சம்பாதித்த ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கிறார்கள்.
வேலூரில் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பணமும் புது நோட்டுகளாக உள்ளதால் எந்த வங்கியில் யார் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம். அந்த நபருக்கும், துரைமுருகனுக்கும் என்ன நெருக்கம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தக்கூடாது. வாக்குச் சாவடிகளுக்கும், வாக்காளர்களுக்கும் கொடுப்பதற்காக அந்த பணத்தை வைத்திருந்தது தெரியவந்தால் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தி.மு.க. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் வலியுறுத்தி உள்ளேன்.
திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடத்தினாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. இப்போது நடத்தினாலும் சரி, பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகே நடத்தினாலும் சரி, எப்போது வேண்டுமானாலும் அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கும்.
கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் பெயரை சொல்லி அவருக்கு களங்கம் கற்பிக்க கூடாது என்று கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக மேடையில் ஏறி எடப்பாடி பழனிசாமி பெயருக்கு களங்கம் கற்பித்து வருகிறார். இது தேர்தல் விதிகளை மீறிய செயலாகும். இதுகுறித்தும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம்.
சென்னையில் குடிசைகளில் தங்கி இருந்தவர்களை அகற்றி குடிசை மாற்றுவாரிய வீடுகளுக்கு இடமாற்றம் செய்திருக்கிறார்கள். அவர்கள் ஓட்டு பழைய தொகுதிகளிலேயே உள்ளது. எனவே அவர்களை சிறப்பு வாகனங்களில் அழைத்து வந்து வாக்களிக்க செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக தி.மு.க.வினர் ஆங்காங்கே பணம் பதுக்கி வைத்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையும் தேர்தல் கமிஷனில் எடுத்து சொல்லி இருக்கிறோம். பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
திருமலைசாமி (பா.ஜனதா):-
வாக்காளர்களுக்கு பண வினியோகம் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகன் மற்றும் நண்பர்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பெட்டிபெட்டியாக பிடிபட்டுள்ளது. எனவே அந்த வேட்பாளரை தகுதி இழப்பு செய்ய வேண்டும். அவர் போட்டியிடாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்தபோது பயங்கரவாத சக்திகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் பலத்த காயம் அடைந்தனர். எனவே எங்களது வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் துணை ராணுவப்படை நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு):-
தமிழக கவர்னர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். அ.தி.மு.க., பா.ஜனதா ஆட்சியின் சாதனைகளை குறிப்பிட்டு பேசுகிறார். எனவே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார கூட்டங்களில் தேர்தல் முடிந்ததும் ரூ.2000 வழங்கப்படும் வங்கி கணக்குகளுக்கு பணம் வந்துவிடும் என்று பிரசாரம் செய்கிறார். இது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு நிகரான செயலாகும். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 கட்ட பாராளுமன்ற தேர்தல் முடிவதற்குள் காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
வருமான வரித்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டி தேர்தல் பணிகளை செய்யவிடாமல் முடக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். மகாத்மாகாந்தி சிலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகளை துணி வைத்து மூடுகிறார்கள். கொடிமரங்கள் அகற்றப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படம் வெளியாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது.
ஆர்.தாமோதரன் (காங்கிரஸ்):-
இந்த தேர்தலோடு தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலையும் உடனே நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளோம். ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையில் வருமானவரி சோதனையை நடத்துகிறார்கள். இது எதிர்க் கட்சிகள் மீது ஏவப்படும் அடக்குமுறையாகும். இப்போது கோடைகாலமாக உள்ளதால் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சரியான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கேட்டுள்ளோம். தேர்தல் அதிகாரிகள் பாரபட்சம் இன்றி தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
கலைவண்ணன் (திரிணாமுல் காங்கிரஸ்):-
மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். வாக்குப்பதிவு நேரத்தையும் நீட்டித்து தர வேண்டும். வேலூரில் துரைமுருகனின் ஆதரவாளர்கள் வீடுகளில் கட்டுகட்டாக பணம் பிடிபட்டுள்ளதால் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #LoksabhaElections2019 #ElectionCommission #ITRaids
தேர்தல் கமிஷனரை சந்தித்த பிறகு அரசியல் கட்சி பிரமுகர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-
அமைச்சர் ஜெயக்குமார் (அ.தி.மு.க.):-
நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். ஆனால் தி.மு.க. 2ஜியில் சம்பாதித்த ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கிறார்கள்.
வேலூரில் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பணமும் புது நோட்டுகளாக உள்ளதால் எந்த வங்கியில் யார் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம். அந்த நபருக்கும், துரைமுருகனுக்கும் என்ன நெருக்கம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தக்கூடாது. வாக்குச் சாவடிகளுக்கும், வாக்காளர்களுக்கும் கொடுப்பதற்காக அந்த பணத்தை வைத்திருந்தது தெரியவந்தால் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தி.மு.க. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் வலியுறுத்தி உள்ளேன்.
திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடத்தினாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. இப்போது நடத்தினாலும் சரி, பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகே நடத்தினாலும் சரி, எப்போது வேண்டுமானாலும் அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கும்.
கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் பெயரை சொல்லி அவருக்கு களங்கம் கற்பிக்க கூடாது என்று கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக மேடையில் ஏறி எடப்பாடி பழனிசாமி பெயருக்கு களங்கம் கற்பித்து வருகிறார். இது தேர்தல் விதிகளை மீறிய செயலாகும். இதுகுறித்தும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம்.
சென்னையில் குடிசைகளில் தங்கி இருந்தவர்களை அகற்றி குடிசை மாற்றுவாரிய வீடுகளுக்கு இடமாற்றம் செய்திருக்கிறார்கள். அவர்கள் ஓட்டு பழைய தொகுதிகளிலேயே உள்ளது. எனவே அவர்களை சிறப்பு வாகனங்களில் அழைத்து வந்து வாக்களிக்க செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக தி.மு.க.வினர் ஆங்காங்கே பணம் பதுக்கி வைத்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையும் தேர்தல் கமிஷனில் எடுத்து சொல்லி இருக்கிறோம். பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
திருமலைசாமி (பா.ஜனதா):-
வாக்காளர்களுக்கு பண வினியோகம் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகன் மற்றும் நண்பர்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பெட்டிபெட்டியாக பிடிபட்டுள்ளது. எனவே அந்த வேட்பாளரை தகுதி இழப்பு செய்ய வேண்டும். அவர் போட்டியிடாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்தபோது பயங்கரவாத சக்திகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் பலத்த காயம் அடைந்தனர். எனவே எங்களது வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் துணை ராணுவப்படை நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு):-
தமிழக கவர்னர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். அ.தி.மு.க., பா.ஜனதா ஆட்சியின் சாதனைகளை குறிப்பிட்டு பேசுகிறார். எனவே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார கூட்டங்களில் தேர்தல் முடிந்ததும் ரூ.2000 வழங்கப்படும் வங்கி கணக்குகளுக்கு பணம் வந்துவிடும் என்று பிரசாரம் செய்கிறார். இது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு நிகரான செயலாகும். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 கட்ட பாராளுமன்ற தேர்தல் முடிவதற்குள் காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
வருமான வரித்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டி தேர்தல் பணிகளை செய்யவிடாமல் முடக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். மகாத்மாகாந்தி சிலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகளை துணி வைத்து மூடுகிறார்கள். கொடிமரங்கள் அகற்றப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படம் வெளியாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது.
ஆர்.தாமோதரன் (காங்கிரஸ்):-
இந்த தேர்தலோடு தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலையும் உடனே நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளோம். ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையில் வருமானவரி சோதனையை நடத்துகிறார்கள். இது எதிர்க் கட்சிகள் மீது ஏவப்படும் அடக்குமுறையாகும். இப்போது கோடைகாலமாக உள்ளதால் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சரியான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கேட்டுள்ளோம். தேர்தல் அதிகாரிகள் பாரபட்சம் இன்றி தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
கலைவண்ணன் (திரிணாமுல் காங்கிரஸ்):-
மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். வாக்குப்பதிவு நேரத்தையும் நீட்டித்து தர வேண்டும். வேலூரில் துரைமுருகனின் ஆதரவாளர்கள் வீடுகளில் கட்டுகட்டாக பணம் பிடிபட்டுள்ளதால் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #LoksabhaElections2019 #ElectionCommission #ITRaids