செய்திகள்
திருப்பூர் அருகே ரூ.10 கோடி வங்கிப் பணம் பறிமுதல்
திருப்பூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட வங்கிப் பணம் 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ElectionFlyingSquad #LokSabhaElections2019
திருப்பூர்:
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தை சோதனையிட்டபோது அதில், கட்டுக்கட்டாக 10 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்தபோது, அது வங்கிக்கு சொந்தமான பணம் என்றும், போத்தனூரில் இருந்து தூத்துக்குடியில் உள்ள வங்கிக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே, பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். வங்கி நிர்வாகிகள் உரிய ஆவணங்களை ஒப்படைத்தால், பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளனர். #ElectionFlyingSquad #LokSabhaElections2019
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில், மொத்தமாக பணம் கொண்டு செல்வதை தடுக்க தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படுகிறது. இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தை சோதனையிட்டபோது அதில், கட்டுக்கட்டாக 10 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்தபோது, அது வங்கிக்கு சொந்தமான பணம் என்றும், போத்தனூரில் இருந்து தூத்துக்குடியில் உள்ள வங்கிக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே, பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். வங்கி நிர்வாகிகள் உரிய ஆவணங்களை ஒப்படைத்தால், பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளனர். #ElectionFlyingSquad #LokSabhaElections2019