செய்திகள்
சுங்கச்சாவடியில் மோதல் - வேல்முருகன் மீது 3 பிரிவில் வழக்கு
மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டதையடுத்து வேல்முருகன் மீது 3 பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Velmurugan
மதுராந்தகம்:
தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் நேற்று காலை காரில் வந்த போது மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.
இதனை அறிந்த கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டனர். அச்சிறுப்பாக்கம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இந்த நிலையில் இதுபற்றி சுங்கச்சாவடி ஊழியர் விநாயகமூர்த்தி என்பவர் அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர் மீது கொலை மிரட்டல், ஆபாச பேச்சு, காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் வேல்முருகனின் கார் டிரைவர் பாஸ்கரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். #Velmurugan
தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் நேற்று காலை காரில் வந்த போது மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.
இதனை அறிந்த கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டனர். அச்சிறுப்பாக்கம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இந்த நிலையில் இதுபற்றி சுங்கச்சாவடி ஊழியர் விநாயகமூர்த்தி என்பவர் அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர் மீது கொலை மிரட்டல், ஆபாச பேச்சு, காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் வேல்முருகனின் கார் டிரைவர் பாஸ்கரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். #Velmurugan