செய்திகள்
மதுபாரை சூறையாடிய பொதுமக்கள்.

நாகராஜ் மது பார் அடித்து நொறுக்கப்பட்டது- பொதுமக்கள் ஆத்திரம்

Published On 2019-03-13 08:24 GMT   |   Update On 2019-03-13 08:24 GMT
பொள்ளாச்சியில் பாலியல் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை தாக்கிய நாகராஜ் மதுபாரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். #PollachiAbuseCase
பொள்ளாச்சி:

பொள்ளாச்சியில் மாணவிகள்- இளம்பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கல்லூரி மாணவி ஒருவர், தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தான் இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பார் நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் உடனே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நாகராஜை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அந்த கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

நாகராஜூக்கு சொந்தமான மது பார் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் சூளேஸ்வரன் பட்டி ஓம் பிரகாஷ் பஸ் நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ளது.

இன்று மதியம் அங்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபாரை சூறையாடினார்கள். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள்.

இதனால் மது குடிக்க வந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவியது. இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, மாணவிகள்- இளம்பெண்களை ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் பார் நாகராஜூக்கும் தொடர்பு உள்ளது.

அவரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் ஆவேசமாக கூறினார்கள். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். #PollachiAbuseCase
Tags:    

Similar News