செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு: அகில பாரத இந்து மகா சபா கட்சி அறிவிப்பு

Published On 2019-03-06 15:17 IST   |   Update On 2019-03-06 15:17:00 IST
அகில பாரத இந்து மகா சபா கட்சியின் ஆதரவை அ.தி.மு.க தலைமையிலான பா.ஜ.க கூட்டணிக்கு அளிப்பது என்று நிர்வாகிகள் ஆலோசன் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. #LSPolls
ஈரோடு:

அகில பாரத இந்து மகா சபா கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு கட்சியின் மாநிலத்தலைவர் சுபாஸ் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கங்காதரன் முன்னிலை வகித்ததார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறும்.

அகில பாரத இந்து மகா சபா கட்சியின் ஆதரவை அ.தி.மு.க தலைமையிலான பா.ஜ.க கூட்டணிக்கு அளிப்பது எனவும், கூட்டணியின் வெற்றிக்கு தமிழகம் முழுவதும் கட்சியின் சார்பாக தேர்தல் பணிகளை செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டணியின் ஆதரவு குறித்து ஆதரவு கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டணி வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டணியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் தேர்தல் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள், தெருமுனை கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தஞ்சை.இளையராஜா, மாநில இளைஞரணி தலைவர் சிவக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் ரஜினி செந்தில், மாநில மாணவரணி தலைவர் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

Similar News