செய்திகள்

வேதாரண்யம் அருகே சிறுமியிடம் பாலியல் தொல்லை- மளிகை கடைக்காரர் கைது

Published On 2019-02-03 12:12 GMT   |   Update On 2019-02-03 12:12 GMT
வேதாரண்யம் அருகே சாக்லேட் வாங்க வந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

இதில் 7 வயது சிறுமியான அவரது மூத்த மகள் அருகில் உள்ள மளிகை கடைக்கு சாக்லேட் வாங்க சென்றார். அப்போது கடைக்காரர் வேதராசு (வயது 50). சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அழுது கொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி இதுகுறித்து தனது தந்தையிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வர்ஜினியா வழக்குப்பதிவு செய்து மளிகை கடைக்காரர் வேதராசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News