செய்திகள்

தூத்துக்குடியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது

Published On 2019-01-19 17:27 IST   |   Update On 2019-01-19 17:27:00 IST
தூத்துக்குடியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் மணி (வயது68). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். தினமும் வீட்டிலிருந்து ஓட்டலுக்கு பைக்கில் சென்று வந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 1-ம் வகுப்பு படிக்கும் 5 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தாள். அங்கு சென்ற மணி சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளாள். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.  புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவர் மணியை `போக்சோ சட்டத்தில்' கைது செய்தனர். 
Tags:    

Similar News