செய்திகள்

1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, மாடு - நகை தொழிலாளி சாதனை

Published On 2019-01-18 04:08 GMT   |   Update On 2019-01-18 04:08 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 மணி நேர தொடர் முயற்சியில் 1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, மாடு ஆகியவற்றை தங்க நகை தொழிலாளி சி.எஸ்.தேவன் உருவாக்கியுள்ளார். #Pongal
வேலூர்:

ஆம்பூரை சேர்ந்த தங்க நகை தொழிலாளி சி.எஸ்.தேவன் (வயது 52). இவர், வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், உலக சாதனை புரிவதற்காக முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் மகாத்மா காந்தி, அப்துல்கலாம் ஆகியோரின் உருவங்களையும், கிறிஸ்துமஸ் குடில், மிகச்சிறிய அளவில் கிரிக்கெட் உலக கோப்பை, திருக்குறள் சுவடி ஆகியவற்றையும் தங்கத்தில் உருவாக்கி சாதனை படைத்து உள்ளார்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 மணி நேர தொடர் முயற்சியில் 1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, மாடு ஆகியவற்றை உருவாக்கியுள்ளார். 4 செ.மீ உயரத்தில் கரும்பு, 1 செ.மீ உயரத்தில் மாடு ஆகியவற்றை தங்கத்தில் செய்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்துவிட்டு செல்கின்றனர். #Pongal
Tags:    

Similar News