செய்திகள்

கும்பகோணம் அருகே குடிபோதையில் மனைவி அடித்து படுகொலை- கணவன் வெறிச்செயல்

Published On 2018-12-03 11:25 GMT   |   Update On 2018-12-03 11:25 GMT
கும்பகோணம் அருகே குடிபோதையில் மனைவியை கணவனே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம், டிச.3-

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஏராகரம் தட்டுமால் கீழ தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55), விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (45). இவர்களுக்கு காசிநாதன் (7), சட்டநாதன் (5) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

சுப்பிரமணியனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மதுபோதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.

இதேபோல் நேற்று இரவும் சுப்பிரமணியன் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கணவரை ஜெயந்தி கண்டித்துள்ளார். தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் சுப்பிரமணியனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இதையடுத்து போதையில் வெறியில் இருந்த அவர் , திடீரென வீட்டில் இருந்த கடப்பாரை கம்பியை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார். மேலும் கம்பியை வைத்து உடலில் குத்தினார்.

இதனால் பலத்த காயம் அடைந்த ஜெயந்தி, ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறகு ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் மனைவி யை கணவனே அடித்துக்கொன்ற சம்பவம் கும்பகோணம் பகுதி யில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. * * * சுப்பிரமணியன் * * * கொலைக்கு பயன்படுத்திய கடப்பாரை கம்பி. * * * கொலையுண்ட ஜெயந்தி

Tags:    

Similar News