செய்திகள்

பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு- கணவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை

Published On 2018-11-17 14:55 GMT   |   Update On 2018-11-17 14:55 GMT
எடப்பாடி அருகே கணவர் கொடுத்த புகாரின் பேரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி:

எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சப்பானிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுகுணா (வயது 35). இவர் எடப்பாடி வருவாய் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் அண்ணாமலை (42) டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர் என்ற முறையில் சுகுணா அலுவலக வேலையாகவும், ஆய்வு பணிக்காகவும் பல இடங்களுக்கு சென்று வருவது வழக்கம்.

இது கணவர் அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை. இதனால் கணவன்- மனைவிக்கும் இடையே பலமுறை மனவருத்தமும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டு, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அண்ணாமலை பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் தனது மனைவி மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் சுகுணா தனக்கு சாப்பாடு கொடுத்தார். அந்த சாப்பாட்டினை சாப்பிட்டபின், தான் மயக்கமடைந்து கட்டிலில் சாய்ததாகவும், தொடர்ந்து தன்னை கட்டிப்போட்ட சுகுணா தலையணையால் அழுத்தி, ஊசியால் குத்த முயன்றதாகவும், அப்போது அவரிடமிருந்து உயிர் தப்பி வந்ததாகவும் கூறியிருந்தார். எனவே மனைவி மீது நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்றும்படி கூறியிருந்தார்.

அதன்பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு கிராம நிர்வாக அலுவலர் சுகுணாவிடம் தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News