செய்திகள்
கும்மிடிப்பூண்டி, உத்திரமேரூரில் பலத்த மழை: மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி
கும்மிடிப்பூண்டி மற்றும் உத்திரமேரூரில் நேற்று பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் ராஜாபாளையம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. ராஜாபாளையத்தில் உள்ள வயல்வெளியில் பெண்கள் நேற்று வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது மின்னல் தாக்கி பூங்காவனம் என்பவரது மனைவி மகேஸ்வரி (55) உயிரிழந்தார்.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. உத்திரமேரூரை அடுத்த வயலக்காவூரில் மின்னல் தாக்கி பூபாலன் என்பவரது மனைவி பார்வதி (40) உயிரிழந்தார். அவருடன் சென்ற அனிதா (48) என்பவரது கண் பார்வை பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனிதா சிகிச்சை பெற்று வருகிறார்.