செய்திகள்

நெல்லையில் பிளஸ்-1 மாணவியிடம் செக்ஸ் சில்மி‌ஷம் செய்த தந்தை கைது

Published On 2018-10-05 07:22 GMT   |   Update On 2018-10-05 07:22 GMT
நெல்லையில் பிளஸ்-1 மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள குன்னத்தூர் கரிக்காதோப்பைச் சேர்ந்தவர் கவந்தர்மஸ்தான் (வயது 36), கூலி வேலை செய்து வந்தார். இவரது மூத்த மகள் சிறுவயது முதல், மேலப்பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் தான் கரிக்காதோப்பில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்து நெல்லை டவுனில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

சமீபத்தில் அந்த மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் சமூக நலத்துறை மூலம் வளர்இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அப்போது மாணவிகளுக்கு யாராவது பாலியல் தொந்தரவு செய்தால் அதுகுறித்து ரகசியமாக புகார் செய்யலாம் என்றும் கூறப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பிளஸ்-1 படித்து வந்த அந்த மாணவி “தன்னை தினமும் இரவில் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்கிறார் என்றும், இதுகுறித்து தனது தாயாரிடம் ஒரு முறை கூறி அவரை கண்டித்த சம்பவம் பற்றியும் அதன் பிறகும் பாலியல் பலாத்காரம் தொடர்வதாகவும்” ஒரு கடிதம் எழுதி சமூக நலத்துறை அதிகாரிகளிடம் ரகசியமாக கொடுத்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய சமூகநலத்துறை அதிகாரிகள் கவந்தர்மஸ்தான் தினமும் குடிபோதையில் செக்ஸ் சில்மி‌ஷம் செய்ததை உறுதி செய்தனர். மேலும் அவரது மகள் நீண்ட நாட்கள் பாட்டி வீட்டில் வளர்ந்து சமீபத்தில் தான் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளதால் அவர்மீது மகள் என்ற பாசத்துக்கு பதில், காமம் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க சமூகநலத்துறை அதிகாரிகள் சுத்தமல்லி போலீசுக்கு, அந்த மாணவி எழுதிய கடிதத்துடன் புகார் செய்தனர்.

அதன்பேரில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரி சுத்ரா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் கவந்தர்மஸ்தானை கைது செய்தனர்.

இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை சிறையில் அடைக்க உள்ளனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News