செய்திகள்
ஆம்பூர் அருகே இறந்த குரங்கிற்கு இளைஞர்கள் அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்.

ஆம்பூர் அருகே குரங்கிற்கு இறுதிசடங்கு செய்த பொதுமக்கள்

Published On 2018-09-25 11:35 GMT   |   Update On 2018-09-25 11:35 GMT
மனிதர்கள் இறந்து போனாலே அனாதை பிணமாக விட்டு செல்லும் நிலையில் இறந்த குரங்குக்கு முறையாக இறுதி சடங்கு செய்து, அடக்கம் செய்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி, ஊட்டல்மலை கானாறு கரையில் நெமிலியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே மரம் விட்டு, மரம் தாவும் போது மின்கம்பியில் சிக்கி பெண் குரங்கு ஒன்று உயிரிழந்தது.

இதனை கண்ட வன்னியநாதபுரம் இளைஞர்கள் மின்சாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து, இறந்த குரங்கின் உடலை மீட்டனர்.

இதனையடுத்து தென்னை ஓலையில் பாடைக்கட்டி இறந்தவர்களுக்கு செய்யும் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்து, பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர் இறுதி ஊர்வலம் நடத்தி, குரங்கின் உடலை அடக்கம் செய்தனர்.

மனிதர்கள் இறந்து போனாலே அனாதை பிணமாக விட்டு செல்லும் நிலையில் இறந்த குரங்குக்கு முறையாக இறுதி சடங்கு செய்து, அடக்கம் செய்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News