செய்திகள்

ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த பட்டதாரி வாலிபர் கைது

Published On 2018-09-16 10:45 GMT   |   Update On 2018-09-16 10:45 GMT
திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக பட்ட தாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பேரையூர்:

திருமங்கலம் மவுலானா ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகைராஜா. இவருடைய மகள் ராஜலட்சுமி என்ற செல்வி (வயது 21). பட்டதாரியான இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் படித்தபோது அதே கல்லூரியில் படித்த திருமால் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது காதலமாக மாறியது.

அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அஜித்குமார் என்னுடன் உறவு வைத்துக் கொண்டார். இந்த நிலையில் அவர் திடீரென என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.

இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் என்னை திருமணம் செய்ய அஜித்குமாருக்கு அறிவுறுத்த வேண்டும்.

இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருமணம் ஆசைகாட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அஜித்குமார் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News