செய்திகள்

திருவண்ணாமலை அருகே ஓடும் பஸ்சில் திடீர் தீ விபத்து- 30 பயணிகள் உயிர் தப்பினர்

Published On 2018-09-10 10:53 GMT   |   Update On 2018-09-10 10:53 GMT
திருவண்ணாமலை அருகே ஓடும் பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கவனிக்கப்பட்டதால் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வேட்டவலம்:

திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு இன்று காலை 7.30 மணியளவில் அரசு விரைவு பஸ் ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் கடை வீதியில் சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் டீசல் டேங்க்கில் இருந்து கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது.

புகை அதிகளவு வந்ததை உடனடியாக கவனித்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். அடுத்த நொடி பஸ் நிறுத்தப்பட்டது. பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.

ஏதே விபரீதம் ஏற்படும் என அச்சமடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சை விட்டு சற்று தூரம் தள்ளி ஓடி நின்று பீதியில் நின்றனர்.

தகவலறிந்ததும், வேட்டவலம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பஸ் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பா விதம் தவிர்க்கப்பட்டது.

30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மாற்று பஸ்சில் பயணிகள் தங்களது பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Tags:    

Similar News