செய்திகள்
காட்டுப்பன்றி தாக்கி பலியான சித்தராஜ்.

தாளவாடியில் காட்டுபன்றி தாக்கி விவசாயி பலி

Published On 2018-08-27 05:16 GMT   |   Update On 2018-08-27 05:16 GMT
தாளவாடியில் காட்டுபன்றி தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள ஊர் தாளவாடி. இங்குள்ள பூஜைகவுடர் வீதியை சேர்ந்தவர் சித்தராஜ் (வயது 30). தொழிலாளி.

இவரது மனைவி பெயர் லாவண்யா (28). திருமணம் ஆகி 2 ஆண்டே ஆகிறது. 1½ வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது.

இன்று காலை 7 மணி அளவில் சித்தராஜ் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து அருகே உள்ள பகுதிக்கு சென்றார்.

அப்போது மறைந்து இருந்த ஒரு காட்டு பன்றி திடீரென ஆவேசமாக ஓடிவந்து அவரது தொடை பகுதியில் கடித்துதூக்கி வீசியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயத்துடன் சத்தம் போட்டபடி துடித்துக் கொண்டிருந்தார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சித்தராஜை மீட்டு தாளவாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

காட்டு பகுதிக்குள் திரியும் காட்டு பன்றிகள் தற்போது தாளவாடி ஊருக்குள்ளேயே புகுந்துவிடுகிறது. ஏற்கனவே பலபேரை விரட்டி கடித்துள்ள காட்டுபன்றியால் இன்று ஒரு உயிர் பறிபோய் உள்ளது எனவே ஊருக்குள் காட்டு பன்றிகளை வரவிடாமல் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என தாளவாடி பகுதி மக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News