செய்திகள்

சேலம் அருகே ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

Published On 2018-08-19 17:09 GMT   |   Update On 2018-08-19 17:36 GMT
ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்தார். இதில் பலத்த அடிப்பட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

காடையாம்பட்டி

ஈரோடு மாவட்டம் பவானி, மேட்டுநாகவம் பாளையம் அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் காந்தி நகர், 1-வது வீதியை சேர்ந்தவர் சற்குணதாஸ் (வயது 46). இவர் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வேலை செய்து வருகிறார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையையொட்டி சற்குணதாஸ் நேற்று மாலை டிக்கெட் எடுத்துக் கொண்டு ஜோலார்பேட்டையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சேலத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததாக தெரிகிறது. இரவு 11 மணி அளவில் சேலம் அருகே உள்ள தின்னப்பட்டி ரெயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் ரெயில் வந்தபோது படிக்கட்டில் இருந்து சற்குணதாஸ் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சேலம் ஜங்சன் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் வைத்திருந்த ஆதார் அடையாள அட்டையை கைப்பற்றி, ஈரோட்டில் உள்ள அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News