செய்திகள்
நிகில்பிரஜன்

உலக நாடுகளின் தலைநகர் பெயர்களை கூறும் 2 வயது சிறுவன்

Published On 2018-07-28 08:52 IST   |   Update On 2018-07-28 08:52:00 IST
விழுப்புரம் பாண்டியன் நகரில் வசித்து வரும் சக்திவேல் என்பவருடைய 2 வயது மகன் நிகில்பிரஜன் உலக நாடுகளின் தலைநகர் பெயர்களை கூறி அசத்தி வருகிறான். #VillupuramBoy
விழுப்புரம்:

விழுப்புரம் பாண்டியன் நகரில் வசித்து வருபவர் சக்திவேல். விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிந்தியா குடும்ப தலைவியாக உள்ளார். இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

நிகில்பிரஜன் என பெயரிட்டு அந்த குழந்தையை வளர்த்து வரும் இந்த தம்பதிகள், அவனை வெளியே அழைத்துச்சென்றால், தான் கண்ணில் கண்ட சம்பவம் குறித்தும், நடந்த இடத்தையும் எத்தனை நாள் கழித்து சென்றாலும் அதை சரியாக சொல்ல தொடங்கியதை அறிந்த பெற்றோர், தங்கள் மகனின் ஞாபக சக்தியை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

மகனின் ஆற்றல் திறமையை மேம்படுத்த இந்திய வரைபடம், அதில் உள்ள 29 மாநிலங்களின் வடிவத்தை ஒன்றிணைத்து மாநிலத்தின் பெயர், அதன் தலைநகரின் பெயர் ஆகியவற்றை சொல்லி கொடுக்க தொடங்கினார்கள். அவனும் அதனை உற்று கவனித்து வடிவங்களை பார்த்து மாநிலத்தின் பெயர் அதன் தலைநகரின் பெயரை சொல்லி அசத்தினான்.

இதனை தொடர்ந்து 196 உலகநாடுகளின் பெயர்கள் மற்றும் அதன் தலைநகர் ஆகியவற்றை பெற்றோர் சொல்லிக்கொடுக்க அதனையும் தற்போது நாடுகளின் பெயர் சொல்லி அதன் தலைநகர் பெயரை கேட்டால் உடனடியாக சரியான பதில் சொல்கிறான்.

அது மட்டுமல்லாமல் உயிர் மெய் எழுத்துக்கள், விலங்குகளின் படத்தை பார்த்து அதன் பெயர்கள், வடிவங்களை பார்த்து வடிவங்களின் பெயர்கள், ராமாயணத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயர்கள், விண்வெளி, சூரிய குடும்பத்தின் கோள்கள், பொது அறிவில் 100 கேள்விகளுக்கு பதில் சொல்லி அசத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  #VillupuramBoy
Tags:    

Similar News