செய்திகள்

மாணவி மரணத்துக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால் போராட்டம் - மாணவர் கூட்டமைப்பு அறிவிப்பு

Published On 2018-07-13 08:15 GMT   |   Update On 2018-07-13 08:15 GMT
மாணவி லேகேஸ்வரி மரணத்துக்கு நீதி கிடைக்காவிட்டால் மாணவர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம் என்று இந்திய மாணவர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் அறிவித்துள்ளார்.
கோவை:

கோவையில் உள்ள கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி பலியான சம்பவம் குறித்து இந்திய மாணவர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தினேஷ் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது-

இது போன்று பல்வேறு கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்லூரியை விளம்பரப்படுத்தவும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் இது போன்று தேவையற்ற பயிற்சியை கல்லூரி நிர்வாகம் அளித்து வருகிறது.

தற்போது கோவையில் பயிற்சி அளித்த ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மையில் உரிய பயிற்சி பெற்றாரா? என்பது தெரியவில்லை. அவர் யார் சொல்லி இங்கு பயிற்சி அளிக்க வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

பயிற்சியாளர் ஆறுமுகம் உண்மையிலே தேசிய பேரிடர் மேலாண்மையில் வேலை பார்த்து வருகிறாரா? என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும்.

மாணவி லேகேஸ்வரி மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இதில் அரசு தரப்பும், கல்லூரி நிர்வாகமும் உரிய பதில் அளிக்க வேண்டும். மாணவி மரணத்துக்கு நீதி கிடைக்காவிட்டால் மாணவர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News