செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து 3 கட்டமாக விசாரணை - அருணா ஜெகதீசன்

Published On 2018-06-04 09:01 GMT   |   Update On 2018-06-04 09:01 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து 3 கட்டங்களாக விசாரணை நடைபெறும். முதல் கட்டமாக பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த உள்ளேன் என்று ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கூறினார். #Thoothukudifiring #Arunajagadeesan
தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதுபற்றிய விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யலாம். இந்த விபரங்கள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

இதற்காக தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யலாம். மேலும் சென்னை குமாரசாமி ரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்திலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யலாம். வருகிற 22-ந்தேதி வரை இதற்கு கால அவகாசம் உள்ளது.

எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. தயக்க மின்றி புகார் செய்யுங்கள். விசாரணைக்கு தேவைப்பட்டால் அழைப்போம். விசாரணை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும். 3 கட்டங்களாக விசாரணை நடைபெறும். முதல் கட்டமாக பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த உள்ளேன்.

2-வது கட்டமாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஊடகவியலாளர்களிடம் விசாரணை நடத்தப்படும். 3-வது கட்டமாக காவல்துறையினர், ஆட்சியர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring  #Arunajagadeesan

Tags:    

Similar News