செய்திகள்

அன்னதானம் சாப்பிட்ட பொதுமக்கள் வாந்தி மயக்கம் - 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

Published On 2018-04-30 09:37 IST   |   Update On 2018-04-30 09:37:00 IST
விருத்தாசலம் அருகே அன்னதானம் சாப்பிட்ட பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள வி.சாத்தமங்கலத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உணவு சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிலருக்கு வாந்தி ஏற்பட்டது. நேரம் செல்லச்செல்ல மேலும் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

உடல்நிலை பாதிக்கப்பட்ட உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar News