செய்திகள்
கடலூர் துறைமுகத்தில் நிற்கும் மர்ம கப்பல்.

கடலூர் துறைமுகம் அருகே மர்ம கப்பல்- பொதுமக்கள் பீதி

Published On 2018-04-06 15:44 IST   |   Update On 2018-04-06 15:44:00 IST
கடலூர் துறைமுக பகுதியை நோக்கி பிரமாண்டமான மர்ம கப்பல் ஒன்று இன்று காலை வந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
கடலூர்:

கடலூர்-நாகப்பட்டினம் வரை உள்ள நிலம் மற்றும் கடல் பகுதிகளில் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை கொண்டு வந்தால் கடலூர், நாகை மாவட்டம் பாலைவனமாக மாறும். கடல் வளம் முற்றிலும் அழியும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை கடலூர் துறைமுக பகுதியை நோக்கி பிரமாண்டமான கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. பின்னர் அந்த கப்பல் துறைமுகத்தில் இருந்து நீண்ட தூரத்தில் நின்றது. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கான பணிக்கு கப்பல் வந்திருக்கலாம் என்று நினைத்து பீதி அடைந்தனர்.

இது குறித்து துறைமுக அதிகாரிகளிடம் கேட்டபோது, துறைமுக பகுதியில் நீண்ட தூரத்தில் கப்பல் காலையில் இருந்தே நின்று கொண்டிருக்கிறது. அந்த கப்பல் துறைமுகத்துக்கு வர வேண்டும் என்றால் முறைப்படி எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் இதுவரை அனுமதி பெறவில்லை. மேலும் அந்த கப்பல் எங்கிருந்து வந்தது? எதற்காக வந்தது என தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்கள்.

கடலூர் துறைமுக பகுதியில் நின்று கொண்டிருக்கும் மர்ம கப்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  #Tamilnews

Similar News